2 லட்சம் தொழிலாளர்களின் பெயரை கல்வெட்டில் பொறித்த அமீரக அரசு..!

 
Dubai-Expo

இரவும் பகலும் கஷ்டப்பட்டு துபாய் எக்ஸ்போ சிட்டியை உருவாக்கிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 லட்சம் தொழிலாளர்களின் பெயரை கல்வெட்டில் பொறித்து பெருமை படுத்தியுள்ளது அமீரக அரசு.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் கடின உழைப்பினால் உருவான துபாய் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. உலக தலைவர்கள், அமீரக ஆட்சியாளர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் இந்த பிரமாண்ட நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Dubai-Expo

பிரத்யேக அரங்கங்கள், பல்வேறு தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் எனும் சிறப்பம்சங்களுடன், அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ச்சியாக தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. அமீரகம், இந்தியா உட்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கிறது.

இந்த கண்காட்சியில் பலரையும் கவர்ந்தது, ஜூப்ளி பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கல்வெட்டுத் தொகுதி என்றே கூறலாம். இந்தக் கல்வெட்டில் மன்னர்களின் பெயர்களோ, இளவரசர்களின் பெருமைகளோ இடம்பெறவில்லை; இந்த எக்ஸ்போ சிட்டியை கஷ்டப்பட்டு உருவாக்கிய 2 லட்சம் தொழிலாளர்களின் பெயர்கள்தான் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

Dubai-expo

லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற வடிவமைப்பாளர் ஆசிப் கான் இந்த கல்வெட்டை வடிவமைத்துள்ளார். அமீரக உள்துறை ஒத்துழைப்பு அமைச்சர் மற்றும் எக்ஸ்போ கண்காட்சியின் மேற்பார்வையாளர் ரீம் அல் ஹாஷிமி இந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.

Dubai-expo

அப்போது பேசிய அவர், “இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் எக்ஸ்போ 2020 நகரத்தை இரவும் பகலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒவ்வொரு தொழிலாளரையும் நாங்கள் பாராட்ட நினைக்கிறோம். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க இணைந்து ஒத்துழைத்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி” என்றார்.

From around the web