பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 28 பேர் பலி!

 
Nepal

நேபாளத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தின் லும்பினி மாகாணம் பேங்கி மாவட்டத்தில் இருந்து முகு மாவட்டத்திற்கு 45 பயணிகளுடன் முகு மாவட்டத்திற்கு நேற்று பேருந்து சென்று கொண்டிருந்தது.

மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் முன் டையர் திடீரென ‘பஞ்சர்’ ஆனது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 28 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் தசாரா பண்டிக்கைக்காக சொந்த ஊர் சென்று கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web