துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை! தங்கம் வென்றார் மனு பாக்கர்!

சீனாவில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (17) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற இன்னொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி தேஸ்வால் 6-ம் இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஜூனியர்
 

துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை! தங்கம் வென்றார் மனு பாக்கர்!சீனாவில் நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (17) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.

இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற இன்னொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி தேஸ்வால் 6-ம் இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஜூனியர் ஒலிம்பிக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் மனு பாக்கர் ஏற்கெனவே தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.  இந்த தொடர் வெற்றிகளின் மூலம், டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார் மனு பாக்கர்.

-வணக்கம் இந்தியா

From around the web