வன்கொடுமை: பெண் மருத்துவர் எரித்துக்கொலை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இளம் பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்பவர் கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். ஷாம்ஷாபாத் என்னுமிடத்தில் பிரியங்காவின் வீடு உள்ளது. அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்வது பிரியங்காவின் வழக்கம். அதன்படி நேற்று மருத்துவமனைக்குச் சென்ற பிரியங்கா வீடு திரும்பும் வழியில் சுங்கச்சாவடி அருகே அவரது இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சராகிவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சகோதரியை
 

வன்கொடுமை: பெண் மருத்துவர் எரித்துக்கொலை!தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இளம் பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்பவர் கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

ஷாம்ஷாபாத் என்னுமிடத்தில் பிரியங்காவின் வீடு உள்ளது. அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்வது பிரியங்காவின் வழக்கம். அதன்படி நேற்று மருத்துவமனைக்குச் சென்ற பிரியங்கா வீடு திரும்பும் வழியில் சுங்கச்சாவடி அருகே அவரது இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சராகிவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சகோதரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பிரியங்கா நிலைமையை விளக்கியதுடன், தமக்கு உதவ லாரி ஓட்டுநர் ஒருவர் முன்வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் இரவு 9 மணியளவில் மீண்டும் சகோதரியை அழைத்தவர் தமக்கு பதற்றமாக இருப்பதாகவும், தம்முடன் பேசிக் கொண்டே இருக்கும்படியும் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் பிரியங்காவின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள ஷாத்நகரில் பாலத்துக்கு கீழே எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் பிரியங்காவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர் உடலில் அணிந்திருந்த சங்கிலியை வைத்தே கொல்லப்பட்டது பிரியங்கா என்பது கண்டுபிடிக்கப்படது. பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

https://www.A1TamilNews.com

From around the web