காத்திருந்து பாருங்கள்! – ரஜினியின் நெத்தியடி பதில்

சென்னை: தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளாக கதாசிரியர், தயாரிப்பாளராக திகழ்பவர் கலைஞானம். வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்தை, பைரவி படத்தில் ஹீரோவாக்கியதோடு, அந்த முதல் படத்திலேயே அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர். அவருக்கு இன்று சென்னையில் பாராட்டு விழா. அதில் பங்கேற்று கலைஞானத்தை கௌரவித்தார் ரஜினிகாந்த். இந்த விழாவுக்கு கிளம்பும்போது, போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும்,
 

சென்னை: தமிழ் சினிமாவில் 70 ஆண்டுகளாக கதாசிரியர், தயாரிப்பாளராக திகழ்பவர் கலைஞானம். வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்தை, பைரவி படத்தில் ஹீரோவாக்கியதோடு, அந்த முதல் படத்திலேயே அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர்.

அவருக்கு இன்று சென்னையில் பாராட்டு விழா. அதில் பங்கேற்று கலைஞானத்தை கௌரவித்தார் ரஜினிகாந்த். 

இந்த விழாவுக்கு கிளம்பும்போது, போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்.

அப்போது அவர் கூறியதாவது:

“தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன். இந்த விஷயம் வெளியில் கசிந்திருந்தால் நிச்சயம் நடக்க விட்டிருக்க மாட்டார்கள்.

காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை மதிப்பிற்குரிய சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார்.

வருகிற சித்திரை 1ல் கட்சி பெயர் அறிவிக்கப்படுமா? என்று கேட்டதற்கு.. “நிச்சயம் உங்களுக்குத் தெரிவிப்பேன்,” என்றார்.

போயஸ் கார்டன் மீண்டும் தமிழக அரசியல் அதிகார மையமாகுமா? என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்,” என்றார் நெத்தியடியாக.

From around the web