சென்னையில் ரஜினிகாந்த்.. என்ன செய்து கொண்டிருக்கிறார்?

சென்னை: தர்பார் படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியுள்ள ரஜினி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தயார் செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஏப்ரம் பத்தாம் தேதி மும்பையில் தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நயன்தாரா, யோகிபாபுவுடன் நடித்த சில காட்சிகளின் ஸ்டில்கள் சமூகத்தளங்களில் லீக் ஆகி பரபரப்பானது. படப்பிடிப்பிற்கு இடையே சென்னை வந்து நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து விட்டுச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. பின்னர் மும்பையிலிருந்து டெல்லி சென்று பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்றார். இடைப்பட்ட நாட்களில்
 
சென்னையில் ரஜினிகாந்த்.. என்ன செய்து கொண்டிருக்கிறார்?
ரஜினி சமீபத்திய படம்…

சென்னை: தர்பார் படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியுள்ள ரஜினி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தயார் செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

ஏப்ரம் பத்தாம் தேதி மும்பையில்  தொடங்கிய தர்பார் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நயன்தாரா, யோகிபாபுவுடன் நடித்த சில காட்சிகளின் ஸ்டில்கள் சமூகத்தளங்களில் லீக் ஆகி பரபரப்பானது.

படப்பிடிப்பிற்கு இடையே சென்னை வந்து நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து விட்டுச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. பின்னர் மும்பையிலிருந்து டெல்லி சென்று பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்றார். இடைப்பட்ட நாட்களில் இரவு பகலாக நடித்த ரஜினிகாந்த் ஜூன் மாதம் 17ம் தேதி சென்னை திரும்பினார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகள் பற்றி ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் குடிநீர் வினியோகம், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுக்கான மன்றப் பணிகளை முடுக்கி விட்டவர், அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகிக் கொண்டும் இருக்கிறார்.

தினசரி காலையிலேயே கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குச் செல்லும் ரஜினி, அங்கே நீச்சல் பயிற்சியுடன் யோகா, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தேவையான ஓய்வும் எடுத்து வருகிறார். இடையிடையே  ஒரு சில முக்கியமானவர்களுடனான சந்திப்புகளும் நடைபெறுவதாகத் தெரிகிறது.

விரைவிலேயே மும்பை சென்று தர்பார் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 

From around the web