மே 15 முதல் 21 வரையிலான இராசி பலன்கள் – சிம்மம்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
மதிப்பு, செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்க்கும் இனங்களிலிருந்து பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள், கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இடமாற்றமும் பதவி உயர்வும் தாமதமாகும். பிரயாணம் நன்மை தராது. நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்காது.
எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் நன்மை தராது. எதிர்பார்க்கும் தகவல்கள் தாமதமாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறிது முன்னேற்றமடையும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். பயிர்த் தொழில் லாபம் தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். ஒப்பந்தக்காரர்கள் நன்மை அடைவர். ஆராய்ச்சியாளர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
சினிமா, சங்கீதம் சிறிது முன்னேற்றமடையும். பங்குச் சந்தை பயன் தரும். காதல் விவகாரத்தில் மோதல் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். கூட்டு வியாபாரத்தில் குழப்பங்கள் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 17, 18, 19 – இந்த நாட்களில் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை
நன்மை தரும் நாட்கள்: 15, 16, 19
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)