மறுபடியும் மழையா..? வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையால் கேரளா மக்கள் பீதி 

திருவனந்தபுரம் : கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களில் வரலாறு காணாது பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. தொடர் மழைக் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டதால் 14 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 10 லட்சத்துக்கும் அதிகமானபேர் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தி, தற்போது
 
திருவனந்தபுரம் : கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கேரளாவில் கடந்த சில நாட்களில் வரலாறு காணாது பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. தொடர் மழைக் காரணமாக  மாநிலத்தின் பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டதால் 14 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. 10  லட்சத்துக்கும் அதிகமானபேர்  மாநிலம் முழுவதும் உள்ள  முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.
 
மீட்பு பணிகள் தீவிரப்படுத்தி, தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். 
 
மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் வெள்ளம், சேறு, சகதியால் மாசுபடிந்த வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் கேரளாவின் அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில்  கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
27 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், 28ஆம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய வட கேரள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
இதனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும், 24 மணி நேர இடைவெளியில் 7 முதல் 11 செ.மீ அளவுக்கான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இரவு நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்க வேண்டாம், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
– வணக்கம் இந்தியா 

From around the web