செல்வ வளம் பெருகிட எளிமையான பரிகாரம்

எத்தனை வருமானம் இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் பணப்பிரச்சனை தீருவதே இல்லை என்ற குறை இருந்து கொண்டே இருக்கிறது. பணம் வந்தாலும் வீட்டில் தங்காமல் விரயச் செலவால் கரைந்து விடுகிறது என்ற புலம்பலையும் கேட்க முடிகிறது. இதை எளிமையான பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும் என்று ஆன்மீக அன்பர்கள் கூறுகிறார்கள். ஏதாவது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்க வேண்டும். ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை சுத்தமான நீரில் அலம்பி அதன் மேல் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம்
 

செல்வ வளம் பெருகிட  எளிமையான பரிகாரம்த்தனை வருமானம் இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் பணப்பிரச்சனை தீருவதே இல்லை என்ற குறை இருந்து கொண்டே இருக்கிறது. பணம் வந்தாலும் வீட்டில் தங்காமல் விரயச் செலவால் கரைந்து விடுகிறது என்ற புலம்பலையும் கேட்க முடிகிறது. இதை எளிமையான பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும் என்று ஆன்மீக அன்பர்கள் கூறுகிறார்கள்.

ஏதாவது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்க வேண்டும். ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை சுத்தமான நீரில் அலம்பி அதன் மேல் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம் வரைந்து, குத்து விளக்கின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

வாரம் ஒரு எலுமிச்சம் பழம் என கணக்கிட்டு ஒரு வருடம் வரை இந்தப் பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

ஒரு வருட முடிவில் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்த எலுமிச்சம் பழங்களுடன் 12 ரூபாய் தட்சிணைப் பணம் சேர்த்து நீர் நிலைகளில் விட்டு விட செல்வ வளம் பெருகும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 6மணி முதல் மாலை 6 மணிக்குள் பசுமாட்டிற்கு 6 மொந்தன் வாழைப்பழங்கள் கொடுக்கலாம். இந்தப் பரிகாரமும் ஒரு வருடம் வரை தொடர்ந்து செய்து வந்தால் பணக்கஷ்டம் நீங்கி வாழ்வில் நிலையான செல்வத்தை பெற முடியும் என்பது ஐதீகம்.

https://www.A1TamilNews.com

From around the web