உடனே குரல் கொடுத்தவன் நல்லவனும் இல்ல! தாமதமாய் கொடுத்தவன் கெட்டவனும் இல்ல!! ரஜினி ஸ்டைலில் ஒரு பஞ்ச்!

கடந்த ஒரு வார காலமாக சாத்தான்குளம் சம்பவத்திற்காக ரஜினிகாந்த் குரல் கொடுக்கல்ல, அவருக்கு மனிதநேயமே இல்லையா என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் அனல் பறந்தது. திமுக தரப்பிலுருந்தும் ரஜினி மீது விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் அதிரடியாக ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் மிகவும் ஆவேசமாக தோற்றமளிக்கும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இந்த ட்வீட்டில் தன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதை புகைப்படம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்று பிரத்தியேகமாக எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 

உடனே குரல் கொடுத்தவன் நல்லவனும் இல்ல! தாமதமாய் கொடுத்தவன் கெட்டவனும் இல்ல!! ரஜினி ஸ்டைலில் ஒரு பஞ்ச்!டந்த ஒரு வார காலமாக சாத்தான்குளம் சம்பவத்திற்காக ரஜினிகாந்த் குரல் கொடுக்கல்ல, அவருக்கு மனிதநேயமே இல்லையா என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் அனல் பறந்தது. திமுக தரப்பிலுருந்தும் ரஜினி மீது விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் அதிரடியாக ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் மிகவும் ஆவேசமாக தோற்றமளிக்கும் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இந்த ட்வீட்டில் தன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதை புகைப்படம் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்று பிரத்தியேகமாக எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ரஜினியின் ட்வீட்டை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்று ரீட்வீட் செய்து சத்தியமா விடவே கூடாது என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டாக்கியுள்ளனர். ஒரு ரசிகர் ரஜினியின் இந்த புதிய படத்தை அப்படியே பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரர் ரஜினி பாட்ஷா அவதாரம் காட்டும் அதிரடி ஸ்டில்லாக மீம்ஸ் ஆக மாற்றி பட்டாசு கிளப்பியுள்ளார். ரஜினியின் ட்வீட், தவித்துக் கொண்டிருந்த அவருடைய ரசிகர்களுக்கு மனநிறைவையும் நிம்மதியையும் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது.

அதே வேளையில் இவ்வளவு லேட்டாக கருத்து சொல்லியிருக்கிறாரே? அதிர்ச்சி அடைவதற்கு இவ்வளவு நாட்கள் ஆச்சா? என்று ரஜினியின் ட்வீட்டை கேலி செய்தும் சில கருத்துக்களை சமூக ஊடகங்களில் காண முடிகிறது.

இந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் சினிமா ட்ராக்கர் பிரசாந்த் என்பவர் போட்டுள்ள ட்வீட் ரஜினி பஞ்ச் மாதிரியே இருக்கிறது

”ரஜினிகாந்த் தாமதமாக குரல் கொடுத்து விட்டார் ” சரி ரைட்டு , நீ அவங்க ரெண்டு பேர் இறந்ததுல இருந்து பட்னியா வீட்ல கிடக்குற ? உனக்கு வலிச்சது மாறியே அவருக்கும் வலிச்சு இருக்கும் . உடனே குரல் கொடுத்தவன் நல்லவனும் இல்ல, தாமதமாய் கொடுத்தவன் கெட்டவனும் இல்ல.” என்ற ட்வீட் தான் அது.

ரஜினி ரசிகர்கள் தரப்பில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்த ட்வீட். இவரு சொல்றதிலேயேயும் ஒரு நியாயம் இருக்கு தானே!. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு சினிமாவில் பேசிய டயலாக்! நிஜத்திலும் அதைத் தான் பின்பற்றுகிறாரோ ரஜினிகாந்த்!

A1TamilNews.com

From around the web