சென்னையில் நாளை முதல் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்!தமிழக அரசு!
சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதனால் நாளை முதல் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி. டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதி. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு
Jul 5, 2020, 20:00 IST
சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதனால் நாளை முதல் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி. டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதி. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக விலகலுடனும் அரசின் வழிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.