இனி சானிடைசருக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானாவிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள விதவிதமான பிராண்ட்களில், கலர் கலரான வண்ணங்களில் சானிடைசர்களை அதிக விலைக் கொடுத்து வாங்கிக் குவித்து வருகிறோம். நமது பாரம்பரிய முறைப்படி வீட்டையும், நம்மையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். மிகச் சாதாரணமாக சலூன்களில் முகச்சவரம் செய்தவுடன் படிகாரம் கொண்டு தேய்த்து விடுவார்கள். சலூன் கடைகளுக்கு பலதரப்பட்ட மனிதர்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்ட அதே ரேஷர் கொண்டு முகச்செய்வதால் நோய்க்கிருமிகள் உருவாவதையும், பரவலையும் தடுக்கவும் தான்
 

இனி சானிடைசருக்கு பதில் இதை உபயோகப்படுத்துங்க!நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானாவிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள விதவிதமான பிராண்ட்களில், கலர் கலரான வண்ணங்களில் சானிடைசர்களை அதிக விலைக் கொடுத்து வாங்கிக் குவித்து வருகிறோம். நமது பாரம்பரிய முறைப்படி வீட்டையும், நம்மையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.

மிகச் சாதாரணமாக சலூன்களில் முகச்சவரம் செய்தவுடன் படிகாரம் கொண்டு தேய்த்து விடுவார்கள். சலூன் கடைகளுக்கு பலதரப்பட்ட மனிதர்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்ட அதே ரேஷர் கொண்டு முகச்செய்வதால் நோய்க்கிருமிகள் உருவாவதையும், பரவலையும் தடுக்கவும் தான் படிகாரம் கொண்டு தேய்க்கப்படுகிறது.

இந்த படிகாரக் கல் நாட்டு மருந்து கடைகளில் மிக எளிதாகக் கிடைக்கும். 20 கி படிகாரத்தை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதனுடன் 100 கி கல் உப்பையும் சேர்த்து கலந்து விடவும். படிகார நீர் தயார்.

வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சாதாரண தண்ணீரால் முகம்,கைகால்களை நன்கு கழுவிய பின்னர் இந்த படிகார நீரை சிறிதளவு கையில் எடுத்து கைகள் மற்றும் முகத்தில் முழுவதும் தடவிக் கொண்டாலே போதுமானது.

அல்லது வெளியில் செல்வதற்கு முன்னர் இப்படி செய்து விட்டு கிளம்பினால் நோய்த் தொற்று தாக்குவதிலிருந்து விடுபடலாம். வீட்டுவாசலில் வைத்துவிட்டால் வீட்டிற்கு வருபவர்களை இதை பயன்படுத்தச் சொல்லலாம்.

A1TamilNews.com

From around the web