பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் – ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்பு

ஹூஸ்டன்: பிரதமர் மோடிக்கு அமெரிக்க இந்திய சமூகத்தினர் வரவேற்பு அளிக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி செப்டம்பர் 22 ம் தேதி ஹூஸ்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் அதிபர ட்ரம்ப் பங்கேற்கக்கூடும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்த நிலையில் ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாரப் பூர்வமாக இதை அறிவித்துள்ளார்கள். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “ஹௌடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட்
 

பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் – ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்பு

ஹூஸ்டன்: பிரதமர் மோடிக்கு அமெரிக்க இந்திய சமூகத்தினர் வரவேற்பு அளிக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி செப்டம்பர் 22 ம் தேதி ஹூஸ்டனில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் அதிபர ட்ரம்ப் பங்கேற்கக்கூடும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்த நிலையில் ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாரப் பூர்வமாக இதை அறிவித்துள்ளார்கள்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

“ஹௌடி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் ஜே ட்ரம்ப் சிறப்புரை ஆற்ற உள்ளார். அமெரிக்க இந்திய சமூகத்தின் இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளுடன் அதிபர் ட்ரம்பும் இணைந்து கொள்கிறார்.

செப்டம்பர் 22ம் தேதி  ஹூஸ்டன் என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

’ஹௌடி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்து உள்ளவர்களுக்கு, இருக்கை உறுதி செய்யப்பட்டவர்களுக்குரிய அனுமதிச் சீட்டு புதன்கிழமை இரவு 8 மணி மத்திய நேரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி என்.ஆர்.ஜி ஸ்டேடியம் மற்றும் சுற்றுப்புறத்தில் திருவிழாக் கோலம் களைகட்டத் தொடங்கியுள்ளது. ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி:

ஹூஸ்டனில் பிரதமர்… ‘ஹௌடி மோடி’

From around the web