மூடிட்டு ஓரமா நில்லுங்க… உங்க இடம் இனிமே அதுதான்!

“மோடிக்கு கருப்பு கொடி காட்டுனா காவிரி வந்திருமா? நடைபயணம் போனா காவிரி வந்திருமா? ஐ.பி.எல் தடை பண்ணா காவிரி வந்திருமா? ” என கேட்கும் ஆர்ஜே பாலாஜி, பாடகர் ஸ்ரீநிவாஸ் வகையறாக்களுக்கும்… ரவீந்திர ஜடேஜாவின், “இன்னும் எனக்கு சென்னை ரசிகர்களின் மேல் அன்பு உள்ளது,” என்கிற ட்வீட்டுக்கு கீழே போய், “அய்யோ.. எங்களுக்கும் அவாளுக்கும் சம்பந்தம் இல்லை. அவாளெல்லாம் அரசியல்வாதி. நாங்கதான் ட்ரூ சென்னைக்காரங்க. அவா வேற,” என அடுத்தடுத்து ட்வீட் போட்டு கெஞ்சி மன்னிப்பு கேட்டு
 

மூடிட்டு ஓரமா நில்லுங்க…  உங்க இடம் இனிமே அதுதான்!
“மோடிக்கு கருப்பு கொடி காட்டுனா காவிரி வந்திருமா?

நடைபயணம் போனா காவிரி வந்திருமா?

ஐ.பி.எல் தடை பண்ணா காவிரி வந்திருமா? ”

என கேட்கும் ஆர்ஜே பாலாஜி, பாடகர் ஸ்ரீநிவாஸ் வகையறாக்களுக்கும்… ரவீந்திர ஜடேஜாவின், “இன்னும் எனக்கு சென்னை ரசிகர்களின் மேல் அன்பு உள்ளது,” என்கிற ட்வீட்டுக்கு கீழே போய், “அய்யோ.. எங்களுக்கும் அவாளுக்கும் சம்பந்தம் இல்லை. அவாளெல்லாம் அரசியல்வாதி. நாங்கதான் ட்ரூ சென்னைக்காரங்க. அவா வேற,” என அடுத்தடுத்து ட்வீட் போட்டு கெஞ்சி மன்னிப்பு கேட்டு காலை நக்கும் பார்த்தசாரதிகள், ரகுராமன்கள், ஸ்ரீராமன்கள், காயத்ரிகள், மகாலட்சுமிகளுக்கும் சில கேள்விகள்…

இவ்ளோ பேசுறீங்களே, நீங்களாம் என்னைக்காவது,

“தண்ணிகுள்ள உக்காந்து யாகம் பண்ணா எப்படிடா மழை வரும்?

ஏழைகிட்ட இருக்கிற காசை செல்லாக்காசு ஆக்குனா கருப்புப் பணம் எப்படிடா ஒழியும்?

லட்ச லட்சமா காசு கொடுத்து கோச்சிங் போயி பாஸ் ஆக முடியும்னா, நீட் எப்படிடா கல்வியில் ஏற்றதாழ்வை குறைக்கும்?

மாமர கட்டைகளை எரிச்சா எப்படிடா மாசுபாடு குறையும்?

தேவதாசியும் இந்துக் கலாச்சாரம்தானே! அப்போ! ஆண்டாளை தேவதாசினு சொன்னா என்னத்துக்குடா கோபம் வருது?

பல நாடுகளை ஒட்டவச்சு இந்தியானு ஒரே நாடா ஆக்குனான் வெள்ளைக்காரன். இதுல எப்படிடா ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் வொர்க் அவுட் ஆகும்?

உச்சநீதிமன்ற தீர்ப்பை என்ன ஹேர்க்குடா நிறைவேத்தாம திரியிற?

ஆவூன்னா பாகிஸ்தானை திட்ரியே, மக்கள் மகிழ்ச்சி அளவீட்டில் இந்தியாவைவிட பாகிஸ்தான் முன்னணியில் இருப்பது தெரியுமா உனக்கு?

15வது திட்டக்குழுல உபி, குஜராத் போன்ற வளராத தண்டச்சோறுகளுக்கு உழைத்து முன்னேறிய தமிழ்நாடு, கேரளாகிட்ட இருந்து அநியாயமா புடுங்கித்தர்றியே, இது நியாயமா..?

கோவிலுக்குள்ள ஒரு குழந்தையை கொடுமை செஞ்சு கொன்றுக்காய்ங்களே, அதை ஆதரிச்சு உங்காளுங்க ஊர்வலம் போறாய்ங்களே வெக்கமா இல்லையா உனக்கு? ”

என்றெல்லாம் ஒரே ஒருமுறையாச்சும் கேள்வி கேட்ருக்கீங்களாடா? ஒரே ஒரு முறை..? நடுராத்திரில நடுத்தெருவில எல்லாரும் பிச்சைக்காரனா அலைஞ்சப்ப “நாடு முன்னேறிரும். டோன்ட் பேனிக்.. டோன்ட் பேனிக்,”னு கத்திட்டு ஓடுன பைத்தியக்காரப் பயலும், ரூபாய் நோட்ல சிப் இருக்குனு உளறுன கிறுக்குப்பயலும் புத்தி சொல்ற அளவுக்கு தமிழ்ச்சமூகம் தரம் தாழ்ந்துரலடா… மூடிட்டு ஓரமா நில்லுங்க. உங்க இடம் இனிமே அதுதான்.

-அசோக் ஆர் (டான் அசோக்)

From around the web