சர்க்கரை நோயே வராமல் தடுக்கும் வழிமுறைகள்!

நீண்ட ஆயுளுடன் வாழ்வது மட்டுமல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வதே பெரும் வாழ்வு. அந்த வகையில் தற்போது 30 வயதிலேயே அனைவரையும் உச்சி முதல் பாதம் வரை அதிரவைப்பது சர்க்கரையே. வந்து விட்ட பிறகு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாமே தவிர முழுமையாக குணப்படுத்த இயலாது. அதனால் வரும் முன்னரே காக்கும் வழிமுறை ஒன்று உண்டு. 35 வயது நிரம்பியவர்கள் 48 நாட்கள் இந்தப் பொடியை வீட்டிலேயே தயார் செய்து உடலில் சேர்த்து வர சர்க்கரை வராமல் தடுக்க முடியும் என்று
 

சர்க்கரை நோயே வராமல் தடுக்கும் வழிமுறைகள்!நீண்ட ஆயுளுடன் வாழ்வது மட்டுமல்ல ஆரோக்கியத்துடனும் வாழ்வதே பெரும் வாழ்வு. அந்த வகையில் தற்போது 30 வயதிலேயே அனைவரையும் உச்சி முதல் பாதம் வரை அதிரவைப்பது சர்க்கரையே.

வந்து விட்ட பிறகு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாமே தவிர முழுமையாக குணப்படுத்த இயலாது. அதனால் வரும் முன்னரே காக்கும் வழிமுறை ஒன்று உண்டு. 35 வயது நிரம்பியவர்கள் 48 நாட்கள் இந்தப் பொடியை வீட்டிலேயே தயார் செய்து உடலில் சேர்த்து வர சர்க்கரை வராமல் தடுக்க முடியும் என்று சித்த மருத்துவம் கூறியுள்ளது. இதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அருகில் இருக்கும் நாட்டு மருந்துக் கடையிலேயே கிடைக்கிறது.

தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ – 100 கிராம்
கோரை கிழங்கு – 100 கிராம்
கருஞ்சீரகம் – 100 கிராம்
பருத்தி கொட்டை – 100 கிராம்
எள்ளு புண்ணாக்கு – 100 கிராம்

இவை ஒவ்வொன்றையும் தனி தனியாக காய வைத்து அரைத்து, சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் காற்று புகாமல் மூடி வைக்கவேண்டும்.

காலை மற்றும் இரவில் தொடர்ந்து 48 நாட்களுக்கு அரை ஸ்பூன் வீதம் 100ml சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். பாதியளவு சுண்டியதும் ஆற வைத்து குடித்து வர வேண்டும். இந்த கசாயத்தை குடிக்கும் பொழுது மது, மாமிசம் எடுத்து கொள்ளவே கூடாது.

பாகற்காய் உணவில் சேர்க்கவும் கூடாது. 48 நாட்கள் இந்த மூலிகை கசாயத்தை தொடர்ந்து எடுத்து கொள்வதன் மூலம் சர்க்கரை வியாதியே வராது.

http://www.A1TamilNews.com

From around the web