காத்திருப்போர் பட்டியலுக்கு தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மாற்றம்! நீதிமன்ற உத்தரவு எதிரொலி!!

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்தை விசாரிப்பதற்காக மதுரை நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு நேரடியாக சாத்தான்குளத்தில் தங்கியிருந்து, போலீஸ் நிலையத்திலும், இறந்தவர்களின் உறவினர்களிடமும் நேரடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ பதிவுகளை செய்தும் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தனர். அதைத் தொடர்ந்து, சாத்தான்குளத்தில் வழக்கு விசாரணைக்கான சாட்சியங்களின் சேகரிப்பில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன்
 
காத்திருப்போர் பட்டியலுக்கு தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மாற்றம்! நீதிமன்ற உத்தரவு எதிரொலி!!சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்தை விசாரிப்பதற்காக மதுரை நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். 
 
வழக்கு விசாரணைக்காக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு நேரடியாக சாத்தான்குளத்தில் தங்கியிருந்து, போலீஸ் நிலையத்திலும், இறந்தவர்களின் உறவினர்களிடமும் நேரடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆவணங்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ பதிவுகளை செய்தும் பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தனர்.
 
அதைத் தொடர்ந்து, சாத்தான்குளத்தில் வழக்கு விசாரணைக்கான சாட்சியங்களின் சேகரிப்பில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் ஈடுபட்டு வந்தார். அப்போது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அவர் சில ஆவணங்களை தருமாறு அங்குள்ள போலீசாரிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு போலீசார் தரமறுத்ததாகவும், அதுமட்டுமல்லாமல் மாஜிஸ்ட்ரேட்டுவை அவதூறாகப் பேசியாதாகவும்  மதுரை நீதிமன்ற பதிவாளருக்கு இ-மெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
 
இந்தப் புகார் உயர்நீதிமன்ற  நீதிபதிகளின் உத்தரவின் படி கிரிமினல் அவமதிப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த கிரிமினல் அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் உடனடியாக நேற்று விசாரணைக்கு எடுத்தனர். 
 
விசாரணை முடிவில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரையும் உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். 
 
நீதிமன்ற உத்தரவை ஏற்று  தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் ஆச்சரியமூட்டும் வகையில் நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
 

From around the web