எப்போதும் இளமையாக இருக்க எளிய வழி!

ஆரோக்கியத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது . பொதுவாக நமது உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் பித்த நோய்களும், காற்றால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உருவாகின்றன. பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்பது சித்தர்கள் வாக்கு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு நிகரான பண்புகளை உடையது கடுக்காய். கடுக்காயின் சுவை துவர்ப்பு. அறுசுவைகளில் நம் உணவில் குறைவாக சேர்வது துவர்ப்பே . எச்சுவை குறைந்தாலும், கூடினாலும் நோய்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும். துவர்ப்பு சுவையே
 

எப்போதும் இளமையாக இருக்க  எளிய வழி!ரோக்கியத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது . பொதுவாக நமது உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் பித்த நோய்களும், காற்றால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உருவாகின்றன.

பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்பது சித்தர்கள் வாக்கு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு நிகரான பண்புகளை உடையது கடுக்காய். கடுக்காயின் சுவை துவர்ப்பு.

அறுசுவைகளில் நம் உணவில் குறைவாக சேர்வது துவர்ப்பே . எச்சுவை குறைந்தாலும், கூடினாலும் நோய்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும். துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்யும்.

கடுக்காயில் உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி ஒரு ஸ்பூன் வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்வைப் பெறலாம்.

கண் பார்வைக் கோளாறுகள்,காது கேளாமை,சுவையின்மை,பித்தநோய்கள், வாய்ப்புண் ,நாக்குப்புண்,மூக்குப்புண்,தொண்டைப்புண்,இரைப்பைப்புண்,குடற்புண்,ஆசனப்புண்,அக்கி, தேமல், படை,தோல் நோய்கள்,உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு,பாத எரிச்சல், மூல எரிச்சல்,உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,சர்க்கரை நோய், இதய நோய்,மூட்டு வலி, உடல் பலவீனம்,உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் என அனைத்து நோய்களையுமே எளிதாக போக்கக் கூடிய அருமருந்து இந்தக் கடுக்காய் .

“காலை இஞ்சிகடும்பகல் சுக்குமாலை கடுக்காய்மண்டலம் உண்டால்விருத்தனும் பாலனாமே.-” காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பது சித்தர்கள் வாக்கு. கடுக்காயை இரவில் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

http://www.A1TamilNews.com

 

 

From around the web