வதந்திகள், அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த ரங்கராஜ் பாண்டே!

சென்னை: கடந்த சில தினங்களாகவே இணைய தளங்கள், வாட்ஸ்ஆப் குழுக்களில் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே குறித்த வதந்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. அவற்றுக்கு தூபம் போடும் வகையில் ஒரு பிரபல பதிவர், ‘முதல்வர் எடப்பாடியின் நெருக்கடி காரணமாக ரங்கராஜ் பாண்டேயை வேலையில் இருந்து அனுப்பி விட்டது தந்தி நிர்வாகம். விரைவில் புதிய சேனலில் அவர் வருவார்’ என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தார். இது வைரலாக வலம் வந்தது. ஆனால் உண்மை நிலை
 

வதந்திகள், அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த ரங்கராஜ் பாண்டே!சென்னை: கடந்த சில தினங்களாகவே இணைய தளங்கள், வாட்ஸ்ஆப் குழுக்களில் தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே குறித்த வதந்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.

அவற்றுக்கு தூபம் போடும் வகையில் ஒரு பிரபல பதிவர், ‘முதல்வர் எடப்பாடியின் நெருக்கடி காரணமாக ரங்கராஜ் பாண்டேயை வேலையில் இருந்து அனுப்பி விட்டது தந்தி நிர்வாகம். விரைவில் புதிய சேனலில் அவர் வருவார்’ என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தார். இது வைரலாக வலம் வந்தது.

ஆனால் உண்மை நிலை வேறு. ஆட்சி மேலிடத்தின் நெருக்குதல் காரணமாக ரங்கராஜ் பாண்டே சில தினங்கள் விடுமுறையில் சென்றிருந்ததாகவும், இப்போது மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதை மேலும் உறுதிப்படுத்தும்விதமாக பாண்டேவே தனது ட்விட்டர் பக்கத்தில், தான் தந்தி டிவிக்காக நடத்தும் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் 3 வது ஆண்டு தொடக்கம் குறித்து ட்வீட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (மார்ச் 12) தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி ஆரம்பித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வரும் சனிக்கிழமை மக்கள் மன்றம் நிகழ்ச்சி, அடுத்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி போன்றவற்றை ரங்கராஜ் பாண்டே மீண்டும் நடத்தப் போகிறார் என்று உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.

எப்படி இருந்தாலும், தன்னை மையமாக வைத்து செய்திகள் கிளம்ப வைத்துவிட்டார் பாண்டே. அதுவே பெரிய சாதனைதானே!

From around the web