அடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்!

தர்பார் பட வெளியீட்டுக்குப் பிறகு ரஜினிகாந்தின் அரசியல் தர்பார் தொடங்கும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகே பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகிறது. அதன் பிறகு ரஜினிகாந்தின் அரசியல் தர்பார் அரங்கேறும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கே இடமில்லை. அரசியலுக்கு வருகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் முறையாக எல்லாவற்றையும் அறிவிப்பார். எந்த நேரத்தில் அரசியல் கட்சி தொடங்குவது, எங்கு
 

அடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்!ர்பார் பட வெளியீட்டுக்குப் பிறகு ரஜினிகாந்தின் அரசியல் தர்பார் தொடங்கும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகே பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகிறது. அதன் பிறகு ரஜினிகாந்தின் அரசியல் தர்பார் அரங்கேறும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கே இடமில்லை.  அரசியலுக்கு வருகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் முறையாக எல்லாவற்றையும் அறிவிப்பார்.

எந்த நேரத்தில் அரசியல் கட்சி தொடங்குவது, எங்கு மாநாடு நடத்துவது, எப்போது மக்களைச் சந்திப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, எந்த வடிவத்தில் வழங்குவது என ஒவ்வொன்றையும் தெளிவான சிந்தனையுடன் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார் ரஜினிகாந்த். உரிய நேரத்தில் ஊடகங்களை அழைத்து ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவார்,” என்று கூறியுள்ளார்.

தமிழருவி மணியன் சொல்வதைப் பார்த்தால், அடுத்த ஆண்டு ஏப்ரல்  மாதத்திற்குள் ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவருமோ என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web