தமிழகத்தில் ஊழல் கறைபடிந்த இரு திராவிட கழகங்களையும் அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது! – தமிழருவி மணியன்!

சென்னை: காமராஜரால் தமிழருவி என அடைமொழி வழங்கப்பட்டு, அவர் காலம் முதல் அரசியல் செய்து வருபவர் தமிழருவி மணியன். காங்கிரஸ் கட்சியில் நெடுங்காலம் பயணித்த அவர் காந்திய மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். ரஜினிகாந்த் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்து வரும் தமிழருவி மணியன், தமிழகத்தில் உண்மையும் நேர்மையும் சார்ந்த அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: “உண்மை பேசினால்
 


சென்னை: காமராஜரால் தமிழருவி என அடைமொழி வழங்கப்பட்டு, அவர் காலம் முதல் அரசியல் செய்து வருபவர் தமிழருவி மணியன். காங்கிரஸ் கட்சியில் நெடுங்காலம் பயணித்த அவர் காந்திய மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

ரஜினிகாந்த் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்து வரும் தமிழருவி மணியன், தமிழகத்தில் உண்மையும் நேர்மையும் சார்ந்த அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“உண்மை பேசினால் உயர முடியாது. பொய்யை விலை பேசி விற்பவர்களுக்குதான் பதவியும், அதிகாரமும் வந்து சேர்கிறது. அரசியலில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி அமைத்தவர்களின் கொள்கை இதுதானே.

உண்மை பேசக்கூடிய மனிதர்கள் இல்லாத சூழ்நிலையில் நான் என் வாழ்நாள் முழுவதும் உண்மையும், நேர்மையும் சார்ந்த அரசியல் வாழ்வை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று பாடுபட்டு வருகிறேன். ஒரு இனமே திசை மாறி செல்கிற பொழுது. தேசத்தின் ஓரு மூலையில் மிக அழுத்தமாக என் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒரு படைப்பாளியாக என் கடமை அது. என் எழுத்து, பேச்சு மூலமாக எச்சரித்து கொண்டுதான் இருந்தேன். ஆனால் என் தலை பின்னால் ஒரு ஒளிவட்டம் இல்லாததாலோ என்னவோ என்னால் கடைசி கிராம மக்கள் வரை சென்று சேர முடியவில்லை. தமிழருவி மணியனை வாசிப்பவர்கள் தமிழருவி மணியனை நேசிக்கிறார்கள். லட்சக்கணக்கில் எனக்கான ஆதரவாளர்கள் ஆதரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

7.50 கோடி மக்கள் இருக்கக்கூடிய மாநிலத்தில் அனைவரும் ஒன்று கூடி ஒருமையான நிலையில் நின்று இந்த ஊழல் கறை படிந்த அரசியல் அமைப்பையும், இரு திராவிட கழகங்களையும் அகற்ற வேண்டும். நான் கேட்கிறேன் இந்த இரு திராவிட கழகங்களின் ஊழல் கறையை எந்த புனித நீரில் கழுவ போகிறார்கள்?

வரலாறு இருக்கும் வரை இரு திராவிட கழகங்களின் ஊழல் கறையும் இருக்கும். எப்படி முடிதிருத்தும் கடைக்கு சென்றால் கடை முழுவதும் எங்கு பார்த்தாலும் முடி தென்படுகிறதா, அதே போல் இரு திராவிட கழகங்களிலும் ஊழலை காணமுடியும்.

இந்த அரசியல் அமைப்பை மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் வந்து விட்டது. இரு திராவிட கழகங்களையும் தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும். அனைவரும் வாருங்கள் நண்பர்களே. மாற்று அரசியலை மலரச் செய்வது நமது கடமை.”

– இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web