தமிழ்நாட்டில் கல்லூரி திறப்பு எப்போது..? அமைச்சர் பொன்முடி

 
Ponmudi

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். சுகாதாரத் துறையினருடன் ஆலோசித்து அதன் பின்னர் முதல்வர் முடிவை தெரிவிப்பார் என்று கூறினார்.

From around the web