தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி.!

 
Vijayakant

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விருப்ப மனு பெற்று பூத்தி செய்து ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

DMDK

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.4 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அமமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதால் அமமுக உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From around the web