தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு..!

 
TN-Assembly

கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 23-ம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா்.

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது.

கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தோவை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா, உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

23 நாள்கள் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

From around the web