நவம்பர் 25 முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

 
Unreserved-coaches-in-train

முன்பதிவில்லாத பெட்டிகளுடன் 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக, ரயில்களில் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை மட்டுமே இருந்து வருகிறது.

இந்நிலையில், நவம்பர் 25-ம் தேதி முதல், பயணிகள் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மொத்தம் 33 முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு,

Unreserved-coaches-in-train

வண்டி எண்.(16729, 16730) மதுரை ஜங்சன் - புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(22609, 22610) மங்களூர் சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16605, 16606) மங்களூர் சென்ட்ரல் - நாகர்கோவில் ஏர்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும் 6 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12605, 12606) சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும் 3 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12635, 12636) சென்னை எழும்பூர் - மதுரை வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும் 3 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16191, 16192) தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும் 6  பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(12679, 12680) சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும் 4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16791, 16792) திருநெல்வேலி ஜங்சன் - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும்  4 பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

வண்டி எண்.(16649, 16650) மங்களூரு செண்ட்ரல் - நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இருமார்க்கத்திலும் 4 இரண்டாம் வகுப்பு சேர் கார் இருக்கை பெட்டிகள் மற்றும் 2  பொதுப்பெட்டிகளுடன் செயல்படும்.

From around the web