தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்!
May 3, 2021, 20:04 IST
தமிழக அரசின் ஆலோசர் பதவியை சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, வரும் 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து முன்னாள் தலைமைச்செயலாளர் சண்முகம் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு சண்முகம் அனுப்பியுள்ளார்.