தமிழ்நாட்டில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

 
School-Students

தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

எனினும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து வந்தார்.  

இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

From around the web