வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் மரணம்..!

 
Manicka-Vasagam

விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாணிக்க வாசகம் (வயது 55). விழுப்புரம் இ.எஸ்.கார்டனில் குடியிருக்கும் இவர், வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளாதார பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் வீடூர் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடைபெறும் 2வது கட்ட தேர்தலுக்கான வாக்குச்சாவடி அலுவலராக மாணிக்க வாசகம் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர், நேற்று (அக். 08) மாலையில் இருந்து வீடூர் அரசுப் பள்ளியில் தங்கியிருந்து தேர்தல் பணி செய்து வந்தார். இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சக ஆசிரியர்கள் அவரை சிகிச்சைக்காக பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த ஆசிரியர் மாணிக்க வாசகத்துக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

From around the web