சென்னையில் மழைக்கால இலவச மருத்துவ முகாம்: தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
CM-Stalin-innagurates-medical-camp

சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மணடலம் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறி போனது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சாலைகள், சுரங்கப்பாதைகள், தெருமுனைகள் என திரும்பிய திசையெங்கும் மழைநீர் ஆக்கிரமித்து, குடியிருப்புகளை தனி தீவாகவே மாற்றியிருந்தது.

இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்கள், தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.எனினும், மழை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடுகள் காரணமாக, தொற்றுநோய் பரவும் ஆபத்து இருப்பதால், அதனை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி  மழை கால இலவச சிறப்பு மருத்துவ முகாமை சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைக்கால முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த சிறப்பு மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நடைபெறுகிறது. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

From around the web