வடசென்னையில் மொழிப்புலவர் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
CM-Stalin

வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. இதில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், அயோத்திதாச பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் அயோத்தி தாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். அயோத்திதாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்புலவர் அயோத்திதாசர் பண்டிதர் என்றும் தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களின்றி நடத்த முடியாது என்று கூறினார்.

From around the web