பத்திரிக்கையாளர்களும் முன்களப் பணியாளர்களே! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று புதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
”மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர்.
— M.K.Stalin (@mkstalin) May 4, 2021
முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்.