காதலன் சொல்லித்தான் அடித்தேன்; கைதான தாயார் கொடுத்த பகீர் வாக்குமூலம் !

 
Gingee

செஞ்சி அருகே பெற்ற குழந்தையை தாய் கொடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவரது தாய் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்த தாய் துளசியை அதிரடியாக கைது செய்து சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணலப்பாடி மதுரா-மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவருக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துளசி (வயது 23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று கோகுல் (வயது 4) மற்றும் பிரதீப் (வயது 2) இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடிபிரச்சினை ஏற்படும் என கூறப்படுகிறது.

பிரச்சனை காரணமாக கடந்த பிப்ரவரி 23-ம் தேதி வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் துளசி தனது இளைய மகன் பிரதீப்பை கடுமையாகத் கையால் தாக்கியதை வீடியோ பதிவு செய்துள்ளார். இதில் காயமடைந்த குழந்தை பிரதீப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது தனது தந்தையுடன் இருந்து வருகிறார். மேலும் துளசி கணவரை பிரிந்து தனது தாய் வீடான ஆந்திரா மாநிலம் ராம்பள்ளி கிராமத்திற்கு சென்று விட்டார்.

இதனிடையே தற்போது குழந்தையை தாய்மையை மறந்து மிருகத்தனமாக துளசி தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குழந்தையின் தந்தை வடிவழகன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து தாய் துளசி மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் தங்ககுருநாதன் மற்றும் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு

தாயை துளசியை கைது செய்ய ஆந்திரா மாநிலம் ராம்பள்ளி கிராமத்திற்கு போலீசார் சென்றனர். இதுகுறித்து பேசிய குழந்தையின் தந்தை வடிவழகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துளசியுடன் திருமணம் நடைபெற்றதாகவும், சென்னையில் மூன்று ஆண்டுகள் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக மோட்டூர் கிராமத்தில் வந்து வசித்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள துளசி விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு இன்று அதிகாலை 5.15 மணிக்குதனிப்படை போலீசார் அழைத்துவந்தனர். சத்தியமங்களம் காவல் நிலையத்தில் செஞ்சி டிஎஸ்பி தலைமையில்துளசியிடம் மகளிர் உள்ளிட்ட போலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது தாய் துளசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துளசியும் அவரது கணவரும் சென்னையில் வசித்தபோது வீடியோ கால் மூலம் பிரேம் குமார் என்ற நபருடன் துளசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பிரேம் குமார், துளசியிடம் பெரிய மகன் உன்னை போன்று இருப்பதாகவும், இளையமகன் துளசியின் கணவரை போல் இருப்பதாகவும், மேலும் குறைமாதத்தில் பிறந்த இரண்டாவது மகனை அடித்து துன்புறுத்தவலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் உன்னை நான் திருமணம் செய்து கொண்டு, நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும் பிரேம் குமார் சொன்னதாகவும் கூறப்படுகிறது. பிரேம்குமார் சொன்ன வார்த்தையை நம்பி துளசி தனது இரண்டாவது மகனே துன்புறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக பிரேம் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைத்து பிரேம் குமார் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் கொலை ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சி செய்த பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web