பேரிடர் காலத்தில் அரசியல் செய்வோருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: முதல்வர் மு.க ஸ்டாலின்

 
CM-Stalin-visits-delta-region

பேரிடர் காலத்தில் அரசியல் செய்வோருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 6-வது நாளாக நேற்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தி வருகிறார். இதனையடுத்து இன்று (நவ 13) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்டார்.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை  ஆய்வு செய்த பின்பு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “இயன்றளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்த சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு.

திமுக ஆட்சிக்கு வந்ததும் தூர்வாரப்பட்டதால் காவிரி நீர் கடைமடை வரை சென்றடைந்தது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு பல திட்டங்களை நிறைவேற்றியது. முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 68,652 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த மழை வெள்ளத்தின் போது சிலர் அரசியல் லாபத்திற்காக விமர்சனம் செய்தனர். இயன்றளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பேரிடர் காலத்தில் அரசியல் செய்வோருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் செயல்படாத தன்மையால்தான் இவ்வளவு பாதிப்பு. கடந்த அதிமுக ஆட்சியில் முன் அறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது” என்றார்.

From around the web