ரேஷன் கடைகளில் பனைவெல்லம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 
Pannaivellam

நியாயவிலை கடைகளில் பனைவெல்லம் விற்க தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் பனை மரம் மற்றும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியாகியிருந்தது. அதேபோல் பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில், அமுதம் அங்காடிகளில் பனைவெல்லம் விற்க தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற்கத் திட்டமிடப்பட்டு தற்பொழுது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இதில் குடும்ப அட்டைதாரர்களை பனை வெல்லமாக வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை பனை வெல்லம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

From around the web