முன்னாள் அதிமுக அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு... செப்டம்பர் 16-ம் தேதி விசாரணை...

 
RajendraBalaji-Highcourt

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைகோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு வரும் 16ம் தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோது வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்புகளை வழங்கினர். பின்னர், இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், கடந்த மார்ச் 4-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என தீர்ப்பு அவர்கள் வழங்கினர். ஆனால்  நீதிபதி ஹேமலதா காலதாமதமான வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர்.

இரு வேறு தீர்ப்பு வழங்கப்பட்டதால், இந்த வழக்கில் 3-வது நீதிபதி கருத்தை அறிய வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும்  வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் ராஜேந்திர பாலாஜி கடந்த 19-ம் தேதி  உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, இவ்வழக்கில் தமிழ்நாடு அரசும் செப்டம்பர் 3-ம் தேதி கேவிட் மனு அளித்தது. இந்நிலையில், இவ்வழக்கு வரும் 16-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளது.

From around the web