தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு..! மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு!

 
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு..! மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிப்பு!

தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கபட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம், மறுஉத்தரவு வரும் வரை, மே மாதத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். இரவுநேர முழுஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

மே 2 -ம் தேதி முழுஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கபடாது. வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு.

சினிமா மற்றும் டிவி தொடர் படப்பிடிப்புகளை, விதிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி.

முழு ஊரடங்கு அன்று சென்னையில் குறைந்த அளவு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி

உணவகங்களில் காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி

காலை 6 - 10 மணி, மதியம் 12 - 3 மணி, மாலை 6 - இரவு 9 மணி வரை, உணவு டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

From around the web