தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..!
இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 10,81,988 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 4,206 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 11,453 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 3,10,219 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 11,065 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 9,63,251 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,05,180 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 1,22,610 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 2,16,47,723 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.