நாட்டின் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் - காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம்

 
GhulamNabiAzad-Stalin

நாட்டின் மிகச்சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் அவரை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.  

இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை எம்.பி.யும், திமுக மகளிரணித் தலைவருமான கனிமொழி, எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாளையும் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், “நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். அவரது செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன. நாளொன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் 18 மணி நேரம் உழைக்கிறார். தந்தை கருணாநிதி போலவே மகனும் இருக்கிறார்” என்று புகழாரம் சூட்டினார்.

From around the web