தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மதிப்பெண் நாளை வெளியீடு..?

 
School

தமிழ்நாட்டில் நாளை அல்லது நாளை மறுநாள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின் படி,

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்து முறையில் பெற்ற 20 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட நிலையில், மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றதால் முன்கூட்டியே 12-ம் வகுப்பு மதிப்பெண்ணை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூலை 31-ஆம் தேதிக்குள் 12-ம் வகுப்பு மதிப்பெண் விபரம் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

From around the web