தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

 
Weather

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று (18.07.2021) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் ,வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (19.07.2021) கோயம்புத்தூர், தேனி, நீலகிரி ,சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் ,ஈரோடு ,திருப்பூர், தர்மபுரி ,கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் (20.07.2021) கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சேலம் ,கிருஷ்ணகிரி ,திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகிற 21 மற்றும் 22-ம் தேதிகளில் கோயமுத்தூர், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் சேலம், கிருஷ்ணகிரி ,திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

இன்று முதல் வருகின்ற 22-ம் தேதி வரை மேற்கு வங்க கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதி ,மத்திய வங்கக் கடல் பகுதி, கர்நாடகா, கேரளா லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதி ,வடக்கு அரபிகடல் ,தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web