தமிழ்நாட்டில் கொரோனா கண்காணிப்பு பணிகளுக்காக கூடுதலாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

 
தமிழ்நாட்டில் கொரோனா கண்காணிப்பு பணிகளுக்காக கூடுதலாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

கொரோனா தொற்றை  கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. பெருநகர மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்றை குறைப்பதற்காக,  மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் கள அளவிலான குழுக்களும் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுச் சுகாதாரம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று தடுப்பு பணியில், 4 ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளை சுழற்சி முறையில் பணியாற்ற ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் தேவைகளை கண்காணிப்பதற்காக அனாமிகா ரமேஷ், அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை கண்காணிப்பதற்காக  கவுரவ் குமார், மருத்துவமனைகளின் படுக்கைகள் இருப்பினை கண்காணிப்பதற்காக  ஆர்.ஐஸ்வர்யா மற்றும் கட்டா ரவி தேஜா ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 29-ந் தேதி  முதல் மே மாதம் 12-ந் தேதி வரை இவர்கள் பணிபுரிவார்கள்.

 

From around the web