அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப்பொருட்கள் தொகுப்பு... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 
TN-Govt

கொரோனா நிவாரணத் தொகை 2-வது தவணையுடன், 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா நிவாரணத் தொகை 2-வது தவணை ரூ.2 ஆயிரத்துடன், 14 மளிகைப் பொருள்களான கோதுமை மாவு, உப்பு, ரவை தலா 1 கிலோ, சா்க்கரை, உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, புளி, கடலை பருப்பு தலா கால் கிலோ, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் தலா 100 கிராம், டீதூள் 100 கிராம் பொட்டலம் 2, குளியல் சோப்பு, துணி சோப்பு தலா 1 ஆகிய பொருள்கள் அடங்கிய பைகளை அரிசி அட்டைதாரா்களுக்கு வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து  உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து 12,959 கோயில்களில் மாத ஊதியமின்றிப் பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள், பூசாரிகள், பணியாளா்களுக்கு கொரோனா கால உதவித் தொகையாக ரூ.4 ஆயிரம், மளிகைப் பொருள்கள் அளிக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

மேலும் பணியின் போது மரணம் அடைந்த முன்களப் பணியாளா்களான பத்திரிகையாளா்கள், மருத்துவா், மருத்துவப் பணியாளா், போலீஸ், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்துக்கு நிவாரண நிதி  வழங்கும் திட்டத்தையும் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

From around the web