தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக 16 சிறப்பு ரயில்கள் ரத்து..! தெற்கு ரயில்வே அறிவிப்பு

 
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக 16 சிறப்பு ரயில்கள் ரத்து..! தெற்கு ரயில்வே அறிவிப்பு

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று, 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்த நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 20-ந்தேதி முதல் தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பொது முடக்கம் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக மின்சார ரெயில் சேவை குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செல்லக்கூடிய அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்றும், 16 பயணிகள் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

From around the web