என் வாழ்நாளில் இதனைக் காணவே காத்திருந்தேன்! – சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ட்வீட்!

டெல்லி: முன்னாள் மத்திய வெளிவிவகார துறை அமைச்சரும், டெல்லி முன்னாள் முதல்வருமான பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் (வயது 67) உடல் நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கடந்த பா.ஜ.க. ஆட்சியில் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்தபொழுது, வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்கள் பலரை மீட்க பேருதவியாக செயல்பட்டவர். அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் கருத்துக்களை, செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு
 

டெல்லி: முன்னாள் மத்திய வெளிவிவகார துறை அமைச்சரும், டெல்லி முன்னாள் முதல்வருமான பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் (வயது 67) உடல் நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கடந்த பா.ஜ.க. ஆட்சியில் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்தபொழுது, வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்கள் பலரை மீட்க பேருதவியாக செயல்பட்டவர். அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் கருத்துக்களை, செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்ற பிரதமர் மோடி அரசின் அறிவிப்பினை அவர் வரவேற்றார். இதுபற்றி அவர், “ஒரு தைரியமான மற்றும் வரலாற்று முடிவு. நம்முடைய கிரேட் இந்தியாவுக்கு – ஒரே இந்தியாவுக்கு வணக்கம் செலுத்துவோம்,” என கூறினார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு எனது நன்றி. எனது வாழ்நாளில் இதனை காணவே நான் காத்திருந்தேன்,” என்று தெரிவித்துள்ளார். இதுவே அவரது இறுதி ட்விட்டாக அமைந்தது. அடுத்த சில மணி நேரங்களில் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

– வணக்கம் இந்தியா

From around the web