நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு உறுதி!

நிர்பயா வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்த குற்றவாளி அக்ஷய் குமாரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் அக்ஷய் குமாரின் தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதில் படுகாயம் அடைந்த நிர்பயா 13 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து
 

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு உறுதி!நிர்பயா வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்த குற்றவாளி அக்ஷய் குமாரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் அக்ஷய் குமாரின் தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதில் படுகாயம் அடைந்த நிர்பயா 13 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் விசாரித்த உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தது. மேலும் சட்டத்துக்குட்பட்டு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web