ஊரடங்கு நீட்டிப்பு உண்டா? இல்லையா? – முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!

மே 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு உண்டு என்றால் விரைவில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், கடைசி நேரம் வரையிலும் மக்களை பதற்றத்தில் வைத்திருப்பது மோசமான செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ”கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய – மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும்
 

ஊரடங்கு நீட்டிப்பு உண்டா? இல்லையா? – முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!மே 31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு உண்டு என்றால் விரைவில் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும், கடைசி நேரம் வரையிலும் மக்களை பதற்றத்தில் வைத்திருப்பது மோசமான செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

”கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய – மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை.

இந்திய அளவிலும் தமிழக அளவிலும் நாள்தோறும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், இறப்போர் எண்ணிக்கையும், அதிகமாகிக் கொண்டேதான் போகிறதே தவிர; குறைந்த மாதிரி தெரியவில்லை.

நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு, ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்று, இதுவரை எடுத்துரைத்து வந்த இரண்டு அரசுகளும், தொற்றுப்பரவல் குறையாத நிலையில், என்ன மாதிரியான முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு மக்களைத் தயார்ப்படுத்துவதும், மக்களுக்கு முன்கூட்டியே சொல்வதும், அரசாங்கத்தின் முக்கியக் கடமையாகும்.

கடைசி நிமிடம் வரைக்கும் மக்களைக் காத்திருக்க வைத்திருப்பதும், மக்களைப் பதற்றத்திலேயே வைத்திருப்பதும் மிகமோசமான செய்கைகள் ஆகும்.

எனவே, எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதனை அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

www.A1TamilNews.com

From around the web