கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என நான் நினைவூட்ட வேண்டுமா? ஸ்டாலின் கேள்வி!!
சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிசிடிவி வீடியோகாட்சி ஒன்றை தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் ஜெயராஜை போலீசார் ஜீப்பில் அழைத்துச் செல்லும் காட்சி உள்ளது.
தந்தையை ஜீப்பில் ஏற்றுவதை தெரிந்து கொண்ட மகன் பென்னிக்ஸ், வேகமாகச் சென்று போலீசாருடன் பேசுவது போன்ற காட்சியும் உள்ளது. ஜீப் சென்ற பிறகு திரும்பி வந்த மகன் தொலைபேசியில் யாருடனோ பேசுகிறார்.
இந்த காட்சிகள் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக உள்ளதாக தனியார் தொலைக்காட்சி சுட்டிக் காட்டியுள்ளது. இந்த வீடியோவை பார்த்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
” #JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu -க்கு நான் நினைவூட்ட வேண்டுமா?’ என்று கேட்டுள்ளார் ஸ்டாலின்
மேலும், இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilNadu ? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன.
கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா?#ArrestKillersOfJayarajAndBennix pic.twitter.com/AdY7Gxnlne
— M.K.Stalin (@mkstalin) June 29, 2020
கொரோனாவை கட்டுப்படுத்த ஸ்டாலின் எந்த ஆலோசனையும் சொல்லவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதை நினைவூட்டும் வகையில் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதையும் நானே சொல்ல வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்டாலின்!