எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள்,மதிப்பெண்கள் பட்டியல் இன்று வெளியீடு!

கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அவர்களுக்கான மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம். மாணவர்களின் உறுதிசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும்
 

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள்,மதிப்பெண்கள் பட்டியல் இன்று வெளியீடு!கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

அவர்களுக்கான மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

மாணவர்களின் உறுதிசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 17-ம் முதல் 21வரை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web