‘டோணி செய்தது சரிதான்… அவருடைய அணிப் பற்று வியக்க வைக்கிறது!’ – கங்குலி

கொல்கத்தா: ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு பென்ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோபால் சர்ச்சையில் சிக்கியது. நடுவரான உல்ஹாஸ் காந்த்தே நோ பால் கொடுத்து விட்டு, பின்னர் தனது முடிவை மாற்றி நோபால் இல்லை என்று அறிவித்தார். பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்தபோது, இந்த சர்ச்சை எழுந்ததால், களத்தில் நின்ற சென்னை அணி பேட்ஸ்மேன்கள் உடனடியாக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, வழக்கமாக அமைதி காக்கும்
 

‘டோணி செய்தது சரிதான்… அவருடைய அணிப் பற்று வியக்க வைக்கிறது!’ – கங்குலி
கொல்கத்தா: ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு பென்ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோபால் சர்ச்சையில் சிக்கியது.

நடுவரான உல்ஹாஸ் காந்த்தே நோ பால் கொடுத்து விட்டு, பின்னர் தனது முடிவை மாற்றி நோபால் இல்லை என்று அறிவித்தார். பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்தபோது, இந்த சர்ச்சை எழுந்ததால், களத்தில் நின்ற சென்னை அணி பேட்ஸ்மேன்கள் உடனடியாக நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, வழக்கமாக அமைதி காக்கும் டோணி, களத்திற்குள்ளேயே வந்துவிட்டார். நோ பால் தரவேண்டும் என அவர் நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியது. கேப்டன் கூல் எனப் புகழ்ப்படும் டோணியா இப்படி என பலரும் வியந்தனர். ஆனால் டோணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

டோணி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. டோணியின் செயலுக்கு முன்னாள் வீரர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். டோணியின் நடவடிக்கை தவறான முன்னுதாரணம் எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, டோணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கங்குலி இது பற்றி கூறும்போது, “அனைவரும் மனிதர்கள்தான். டோணியின்அணிப் பற்றும், போட்டித்தன்மையும் வியக்க வைக்கிறது,” என்றார்.

– வணக்கம் இந்தியா

From around the web