கிரகணத்தின்போது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட உலக்கை!
சூரிய கிரகணத்தின்போது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வீட்டின் முன்பு உலக்கையை நிறுத்தி வைத்திருந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சூரிய கிரகணம் தொடங்கும்போது அப்பகுதி பெண்கள் வீட்டின் முன்பு உலக்கையை நிறுத்தி வைத்து, விளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்தனர். சுமார் 9 மணிக்கு வைக்கப்பட்ட இவை, 11 மணிக்கு கிரகணம் முடியும் வரை அப்படியே நிறுத்திவைக்கப்பட்டன. கிரகணம் முடிந்தவுடன் உலக்கை தானாகவே கீழே விழுந்ததாகவும், விளக்கும் தாமாகவே அணைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம்
Dec 26, 2019, 14:02 IST
சூரிய கிரகணத்தின்போது பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் வீட்டின் முன்பு உலக்கையை நிறுத்தி வைத்திருந்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சூரிய கிரகணம் தொடங்கும்போது அப்பகுதி பெண்கள் வீட்டின் முன்பு உலக்கையை நிறுத்தி வைத்து, விளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்தனர். சுமார் 9 மணிக்கு வைக்கப்பட்ட இவை, 11 மணிக்கு கிரகணம் முடியும் வரை அப்படியே நிறுத்திவைக்கப்பட்டன.
கிரகணம் முடிந்தவுடன் உலக்கை தானாகவே கீழே விழுந்ததாகவும், விளக்கும் தாமாகவே அணைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியிலும் சூரிய கிரகணத்தின் போது வீட்டு வாசலில் உலக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.