நட்பு தான் அண்ணன் நா.முத்துக்குமாரின் அடையாளம்! பின்னணிப் பாடகர் வேல்முருகன் பெருமிதம்!!

பிரபல பின்னணிப் பாடகர் வேல்முருகன், கவிஞர் நா.முத்துக்குமாரின் 45 வது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்து, நினைவுகளை பகிர்ந்துள்ளார். நட்புக்கு அண்ணன் முத்துக்குமார் பெரும் அடையாளமாகத் திகழ்கிறார் என்றும் கூறியுள்ளார். வாழ்த்துச் செய்தியில் வேல்முருகன் கூறியுள்ளதாவது, “2005ம் ஆண்டு கவிஞர் அறிவுமதி மூலமாக அண்ணன் முத்துக்குமாரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவருடைய புத்தகங்கள், கவிதைகள் வாசிப்பது, பாடல்கள் ரசிப்பது என உலகத்தில் உள்ள தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாக, அவருடன் பயணித்தேன். அண்ணனின் திரைப்படப் பாடல்கள் மக்களுக்குப் பிடிச்சது
 

நட்பு தான் அண்ணன் நா.முத்துக்குமாரின் அடையாளம்! பின்னணிப் பாடகர் வேல்முருகன் பெருமிதம்!!பிரபல பின்னணிப் பாடகர் வேல்முருகன், கவிஞர் நா.முத்துக்குமாரின் 45 வது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்து, நினைவுகளை பகிர்ந்துள்ளார். நட்புக்கு அண்ணன் முத்துக்குமார் பெரும் அடையாளமாகத் திகழ்கிறார் என்றும் கூறியுள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் வேல்முருகன் கூறியுள்ளதாவது,

“2005ம் ஆண்டு கவிஞர் அறிவுமதி மூலமாக அண்ணன் முத்துக்குமாரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவருடைய புத்தகங்கள், கவிதைகள் வாசிப்பது, பாடல்கள் ரசிப்பது என உலகத்தில் உள்ள தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாக, அவருடன் பயணித்தேன். அண்ணனின் திரைப்படப் பாடல்கள் மக்களுக்குப் பிடிச்சது நிறைய இருக்கு. 

என்னைக் கவர்ந்து, கண்கலங்க வைத்தவை, தேசிய விருது பெற்ற தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இடம் பெற்றுள்ள “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்”  என்ற பாடல்களாகும்.

இரண்டு பாடல்களுக்கு தேசிய விருது பெற்று,  காதல், வீரம், குடும்ப உறவு, நட்பு என அனைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில்,  மக்கள் மனதில் இடம் பெற்ற பாடல்களை எழுதியவர் அண்ணன் முத்துக்குமார். 

நட்புக்காக அவர் எழுதிய ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் “வேணாம் மச்சான் வேணாம்” பாடலை நான் பாடியுள்ளேன். அதில் கடைசியில் ஒரு வரி எழுதியிருப்பார். கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா என்று ஒரு வரி இருக்கும். நட்புக்கு அவ்வளவு முக்கியத்தும் கொடுத்தவர் அண்ணன் முத்துக்குமார்!

அவருடைய வார்த்தைகளும், பாடல்களும், எழுத்துகளும் உலகத்தில் உள்ள அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்குள்ளும் ஊடுருவி வந்து கொண்டிருக்கிறது. அவருடைய வரிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அண்ணனின் நட்பு கிடைத்ததில் பெருமைப் படுகிறேன். அவருடைய பிறந்தநாளில் இந்த வீடியோ மூலம் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் அடைகிறேன்,” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

A1TamilNews.com

From around the web